(நமது நிருபர்)
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை அடுத்து, கட்சி மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வௌ்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பெரும்பான்மையானோர் இங்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
.இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இங்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆதரவு அளிப்பது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் எதிர்த்துள்ளனர்.
இதனைவிட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த முடிவினை எதிர்த்து தனித்து களமிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இவருக்கும் சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரவு வழங்கவுள்ளனர். இந்த நிலையில் சுதந்திரக் கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுபடும் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்ப்பு வெளியிட்டுள்ள அணியினரில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கம் என்ற பெயரில் இயங்கவுள்ளனர். அவர்களின் சார்பில் குமார வெல்கம ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
மற்றொரு அணியினர், சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர் அல்லது ஐ.தே.க.வுக்கு தாவ முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கட்சி பிளவுபடும் வாய்ப்பு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM