அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாகக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக் கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளது . கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே சீவனோபாயத்தை நடத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாகக் கரையோர பிரதேசத்தில் வீசும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் , நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்குச் சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது.
கடந்த மாதம் (17) ஆம் திகதி ஆழ் கடல் மீன்பிடிக்குச் சென்ற காரைதீவு , மாளிகைக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM