அம்பாறை கடலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீன்பிடி குறைவு ; மக்கள் கவலை

Published By: Digital Desk 4

06 Oct, 2019 | 09:20 PM
image

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாகக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக்  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளது . கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே சீவனோபாயத்தை  நடத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான  கடந்த சில வாரங்களாகக் கரையோர பிரதேசத்தில் வீசும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் , நீரோட்டத்தின் தன்மையில்   ஏற்பட்டுள்ள  மாற்றத்தினாலும்  மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்குச் சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது.

கடந்த மாதம் (17) ஆம் திகதி ஆழ் கடல் மீன்பிடிக்குச் சென்ற காரைதீவு , மாளிகைக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58