(நா. தனுஜா)
தற்போது காணப்படும் பொருளாதார நிலையில் 12.5 கிலோகிராம் லிட்றோ எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 600 ரூபாவால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தினால் எரிவாயுவின் விலையும், வேறு பொருட்களின் விலைகளும் குறைக்கப்படுவதற்கான காரணம் சிறுபிள்ளைக்குக்கூட புரியும்.
எனக்குத் தெரிந்த பொருளாதார நிபுணர் ஒருவரின் கருத்தின் பிரகாரம் தற்போது காணப்படும் பொருளாதார நிலையில் 12.5 கிலோகிராம் லிட்றோ எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 600 ரூபாவால் குறைக்க முடியும்.
எனினும் அரசாங்கம் சுமார் 200 ரூபாவையே குறைத்திருக்கிறது. அத்தோடு எரிபொருள் விலையை 25 ரூபாவால் குறைக்க முடியும். எனவே தேர்தலை இலக்காகக் கொண்டே அரசாங்கம் இவ்வாறான பொய்யான விலைக்குறைப்புக்களை செய்கின்றது என்றும் அவர் கூறுனார்.
கொழும்பிலுள்ள வியத்மக அமைப்பில் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தது.
எனினும் அது குறித்து அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அவர்களுடைய திட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM