203 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி !

Published By: Vishnu

06 Oct, 2019 | 03:45 PM
image

தென்னபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 02 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் ஆர்பமானது. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 215 ஓட்டம் எடுத்தார். ரோகித் சர்மா 176 ஓட்டம் எடுத்தார்.

இதன்பின்னர் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. எல்கர் 160 ஓட்டங்களையும், டீகொக் 111 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். 

இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டுக்களை சாய்த்தார். 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்களை எடுத்து ஓட்டங்களை எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தது. 

இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 395 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, தொடக்கத்திலேயே எல்கர் விக்கெட்டை இழந்தது. 

அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்களை எடுத்திருந்தது. மார்க்ரம் 3 ஓட்டத்துடனும் ப்ரூயின் 5 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இறுதி நாள் ஆட்டம் இன்று காலைத் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ப்ருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். 

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார். 

அடுத்து மொஹமட் ஷமியின் பந்துவீச்சில் திணறியது தென்னாபிரிக்கா. அதன்படி ஷமி பவுமா (0),  டுபிளிசிஸ் (13), குயின்டன் டிகொக்  (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார்.  

பின்னர், நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் (39), பிலாண்டர் (0) கேசவ் மகாராஜ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் தூக்கினார் ஜடேஜா. இதனால் அந்த அணி, 8 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. 

பின்னர் இணைந்த முத்துசாமியும் பீடிட்டும் நிதானமாக ஆடி, இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பீடிட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 56 ஓட்டங்களை எடுத்தபோது, ஷமியின் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ரபாடா, முத்துசாமியுடன் ஜோடி சேர்ந்தார். 18 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரபாடா, ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனால் அந்த அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 203 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க வீரர் முத்துசாமி 49 ஓட்டங்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் மொஹமட் ஷமி 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20