ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை 6 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இதற் கிடையில் சுதந்திர கட்சியால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இது தொடர்பில் உத்தியோக பூர்வமாக நாளை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தனது உத்தியோகபூர்வ காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்ப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆம் திகதி காலை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த குறுகிய காலத்தில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது என்பது சுதந்திர கட்சிக்கு சாத்தியம் அற்ற ஒன்று குறிப்பிட்ட அவர், நாளை கூடவுள்ள விசேட செயற்குழுவில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுவதாகவும்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எங்களின் இறுதி தீர்மானமும் இந்த கூட்டத்தில் தெரிவிக்க உள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் தவிர்த்து எதிர்வரும் தேர்தல்களில் தற்போதைய சின்னங்களை தவிர்த்து பொது சின்னங்களிலேயே நாங்கள் போட்டியிடிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM