உடுதும்பர இரட்டைக் கொலை ; சந்தேக நபர் சிக்கினார்!

Published By: Vishnu

04 Oct, 2019 | 02:22 PM
image

(செ.தேன்மொழி)

கண்டி மாவட்ட உடுதும்பர பகுதியில் கணவன் , மனைவிக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

உடுதும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொல்ல , கஹடலியத்த பகுதியில் நேற்று மோதலொன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தின் போது அதிக மதுபோதையில் இருந்துள்ள குறித்த நபர் அவரது மனைவியுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் இவர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்தே அந்த நபர் அவரது மனைவியையும் மனைவியின் தாய் மற்றும் அவரது தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த சந்தேக நபரின் தந்தை , மாமியும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மனைவி உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகொல்ல - காஹட்டலியத்த பகுதியைச் சேரந்த 53 வயதுடைய விஜேரத்ன பண்டா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அஜந்தா என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையெனவும் உடுதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உடுதும்பர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51