(செ.தேன்மொழி)
கண்டி மாவட்ட உடுதும்பர பகுதியில் கணவன் , மனைவிக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
உடுதும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொல்ல , கஹடலியத்த பகுதியில் நேற்று மோதலொன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தின் போது அதிக மதுபோதையில் இருந்துள்ள குறித்த நபர் அவரது மனைவியுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் இவர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்தே அந்த நபர் அவரது மனைவியையும் மனைவியின் தாய் மற்றும் அவரது தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த சந்தேக நபரின் தந்தை , மாமியும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மனைவி உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகொல்ல - காஹட்டலியத்த பகுதியைச் சேரந்த 53 வயதுடைய விஜேரத்ன பண்டா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அஜந்தா என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையெனவும் உடுதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
உடுதும்பர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM