ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் பகுத்தறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
தேர்தல் வந்துவிட்டால்போதும். மஹிந்தவுக்கும் அவரை சூழவுள்ளவர்களுக்கும் ‘இனவாத’ காய்ச்சல் தொற்றிக்கொள்கின்றது. இதுவரை காலமும் இனவாதிகளுக்கு பாலூட்டி அவர்களை மறைமுகமாக இயக்கிய கோத்தபாய ராஜபக் ஷவும் தற்போது அந்த அணியில் இணைந்து அரசியலுக்கு வந்துள்ளார். இவர்களுக்கு மட்டுமே தேசப்பற்று இருப்பதாக எண்ணி கூவித் திரிகின்றனர்.
மக்கள் மத்தியில் தற்போது நேர்வழியில் பிரசாரம் செய்யமுடியாத அளவுக்கு தமது ஆட்சியின்போது பல சகிக்கமுடியாத சம்பவங்களை அரங்கேற்றிய ராஜபக் ஷக்களும் அவர்களின் சகாக்களும் வேறு வழியின்றியே வழமைபோல் இனவாத ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர். தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி கறைபடிந்த தமது கடந்தகால பயணத்தை மூடிமறைக்க முற்படுகின்றனர். சஜித் பிரேமதாசவுக்கும் எங்களுக்கும் ராஜபக் ஷக்களைவிட நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்துமடியபோகும் தாய்நாடுமீது அதிக பற்று இருக்கின்றது.
ஆனால், அரசியலுக்காக ஒருபோதும் தாய்நாடு மீதான பற்றை அடகுவைத்து வாக்குவேட்டை நடத்தியது கிடையாது. உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை சந்தைப்படுத்த முற்படுபவன் உண்மையான தேசப்பற்றாளன் கிடையாது என்பது தற்போது மக்களுக்கும் புரிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலுக்கு அப்பால் நவயுகத்துடன் ஒப்பிட்டு சிந்தித்து முடிவெடுக்ககூடிய வல்லமை சஜித்துக்கு இருக்கின்றது. இதனால்தான் அவரின் கரங்களை பலப்படுத்த நாம் ஆதரவு வழங்கியுள்ளோம். சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் அனைவரும் தீவிரமாக செயற்பட வேண்டியுள்ளது.
அவரின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன். எனவே, மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் உண்மை எது, பிழை எது என்பதை பகுத்தறிந்து முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM