ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மொழி பேசும் பொது வேட்பாளர்

Published By: R. Kalaichelvan

04 Oct, 2019 | 11:01 AM
image

ஜனா­தி­ப­தி ­தேர்­த­லுக்­கா­ன­ முஸ்­தீ­பு­கள்­ மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­ இறுதிக்­கட்­ட­ நே­ரத்­தி­லா­வ­து­ த­மிழ்­பே­சும் ­பொ­து ­வேட்­பா­ளர்­ ஒ­ரு­வ­ரை­ நி­றுத்­த­ சி­று­பான்­மைக் ­கட்­சி­க­ளின்­ ஆ­த­ர­வா­ளர்­களும், மக்­க­ளும்­ தமிழ்­, முஸ்­லிம் ­கட்­சி­க­ளின்­ த­லை­வர்­க­ளுக்­கு­ அ­ழுத்­தம் ­கொ­டுக்­க­வேண்­டும்­ எ­ன­ கோ­ரிக்­கை ­வி­டுத்­துள்­ள­ முன்­னாள்­ அ­மைச்­சரும், ஐக்­கி­ய ­ச­மா­தா­னக்­ கூட்­ட­மைப்­பின் ­த­வி­சா­ள­ரு­மா­ன­ ப­ஷீர்­ சே­கு­தாவூத் , தமிழ்­முஸ்­லிம் ­மக்­கள்­ எ­திர்­வ­ரும் ­ஜ­னா­தி­ப­தித்­தேர்­த­லில்­ பு­தி­ய­ அ­ணு­கு­மு­றை­யைப் ­பரீட்­சித்­துப் ­பார்க்­க­வேண்­டி­ய­து­ கா­லத்­தின் ­கட்­டா­ய­மா­கும்­ என்­றும் ­தெ­ரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தி­க­ளாலும், அர­சாங்­கங்­க­ளா­லும்­ உத்­த­ர­வா­தம் வழங்கப்பட்டும்­ நி­றை­வேற்­றப்­ப­டா­மல்­ கி­டப்­பில் ­போ­டப்­பட்­டுள்­ள­ த­மிழ்­, முஸ்­லிம் ­மக்­க­ளின் ­கோ­ரிக்­கை­க­ளை ­நி­ரல்­ப­டுத்­த­ வேண்­டும்­ என்றும், அவற்­றை­நி­றை­வேற்­று­வ­தற்­கா­ன­ அ­ர­சி­யல் ­போராட்­டத்­தை­ முன்­னெ­டுப்­ப­தற்­கா­ன­ ஆ­ணை­யை­சி­று­பான்­மை­ மக்­க­ளி­டம்­ கேட்­டுப்­ பெ­று­கி­ற ­சந்­தர்ப்­ப­மா­க­ இத்­தேர்­தலை­ த­மிழ்­, முஸ்­லிம் ­த­லை­வர்­கள் ­ப­யன்­ப­டுத்­த­ வேண்­டும்­ எ­ன­வும்­ அ­வர்­ வ­லி­யு­றுத்­தி­யுள்ளார்.  

ஜனா­தி­ப­தி­ தேர்­தல் ­தொ­டர்­பா­க­ அ­வர்­ ஊ­ட­கங்­க­ளுக்­கு ­வி­டுத்­துள்­ள­ அ­றிக்­கை­யி­லே­யே­ இவ்­வா­று­ வ­லி­யு­றுத்­தி­யுள்ளார்.  

அவ்­வ­றிக்­கை­யில்­ அ­வர் ­மே­லும் ­தெ­ரி­வித்­துள்­ள­தா­வது:-  

கடந்­த ­நாற்­ப­து­ ஆண்­டு ­கா­ல­மா­க­ ந­டை­பெற்­ற­ அ­னைத்­து­ ஜ­னா­தி­ப­தித் ­தேர்­தல்­க­ளி­லும்­ த­மிழ்­பே­சும்­ மக்­கள் ­பெ­ரி­ய­ கட்­சி­க­ளின்­ வேட்­பா­ளர்­கள்­ அ­னை­வ­ருக்­கும்­ அ­ளித்­த­ வாக்­கு­கள்­ அ­னைத்­தும்­ வீண்­வி­ர­ய­மாக்­கப்­பட்­ட ­வாக்­கு­கள்­ என்­ப­தே­ உண்­மை­யாகும். எந்­த­வொ­ரு­ ஜ­னா­தி­ப­தி­யும் ­த­மிழ்­பே­சும்­ மக்­க­ளின்­ அ­ர­சி­யல்­ அ­பி­லா­ஷை­க­ளை­ நி­றை­வேற்­றி­ வைக்­க­வில்­லை­என்­ப­தை­ பா­ட­மா­கக் ­கொண்­டுள்­ள­ தமிழ், முஸ்­லிம்­ மக்­கள்­ எ­திர்­வ­ரும் ­ஜ­னா­தி­ப­தித்­ தேர்­த­லில்­ பு­தி­ய­ அ­ணு­கு­மு­றை­யைப் ­ப­ரீட்­சித்­துப் ­பார்க்­க­ வேண்­டி­ய­து­ கா­லத்­தின்­ கட்­டா­ய­மாகும்.  

காலத்­துக்­கு­ கா­லம்­ ஆட்­சிக்­கு­ வந்­த ­ஜ­னா­தி­ப­தி­க­ளாலும், அர­சாங்­கங்­க­ளா­லும்­ உத்­த­ர­வா­தம்­ வ­ழங்­கப்­பட்­டும்­ நி­றை­வேற்­றப்

­படா­மல்­ கி­டப்­பில் ­போ­டப்­பட்­டுள்­ள­ த­மிழ்,­ முஸ்­லிம் ­மக்­க­ளின் ­கோ­ரிக்­கை­க­ளை­ நி­ரல்­ப­டுத்­தி ­அ­வற்­றை­ நி­றை­வேற்­று­வ­தற்­கா­ன­ அ­ர­சி­யல் ­போ­ராட்­டத்­தை ­முன்­னெ­டுப்­ப­தற்­கா­ன­ ஆ­ணை­யை­ சி­று­பான்­மை­ மக்­க­ளி­டம் ­கேட்­டுப்­பெ­று­கி­ன்ற­ சந்­தர்ப்­ப­மா­க­ த­மிழ்­, முஸ்­லிம் ­த­லை­வர்­கள்­ இத்­தேர்­த­லைப் ­ப­யன்­ப­டுத்­த­ வேண்டும்.  

பெரு­ம­ள­வா­ன ­வாக்­கு­க­ளை­ மக்­கள்­ த­ரு­வார்­க­ளா­க ­இ­ருந்­தால்­ இவ்­வா­ணை­யை­ பெ­ரும்­பான்­மை­ சிங்­க­ள­ மக்­க­ளி­டமும், சர்­வ­தே­சத்­தி­டமும், ஐக்­கி­ய­நா­டு­கள் ­ச­பை­யி­டமும், அயல்­நா­டு­க­ளி­ட­மும்­ முன்­வைத்­து­ நி­யா­யம் ­கோ­ரு­வ­தற்­கா­ன­ பு­தி­ய­ அ­ர­சி­யல் ­ந­கர்­வு­க­ளைச்­ செய்­ய­ மு­டியும். தமிழ்­ அ­ர­சி­யல்­ சக்­தி­களும், முஸ்­லிம்­ அ­ர­சி­யல் ­சக்­தி­க­ளும் ­பாரா­ளு­மன்­றத் ­தேர்­தல்­க­ளில்­தான்­ ஆ­ணை­க­ளைப்­ பெற்­றி­ருக்­கின்­றன. இவை­யும்­ வெற்­றுப்­ பி­ர­சா­ர­ நெ­டி­க­ளா­கவும், கற்­பி­தங்­க­ளா­க­வும் ­ப­ழை­ய­ன­வா­கி­விட்­ட­ன­ என்­ப­தை­ பு­ரிந்­து­கொள்­வ­து­ முக்­கி­ய­மாகும்.  

பழை­ய­ அ­பி­லா­ஷைக­ளு­ட­னும்­கோ­ரிக்­கை­க­ளு­டனும், யுத்­த­மு­டி­வின்­பின்­னரும்   உயிர்த்­த­ ஞா­யி­று­ தாக்­கு­த­லின்­ பின்­னரும்  கிடைத்­த­ அ­னு­ப­வங்­க­ளின்­ அ­டிப்­ப­டை­யில்­ பு­தி­ய­ கோ­ரிக்­கை­க­ளைக்­ க­லந்­து­ முன்­வைத்து­ புத்­தம்­ பு­தி­ய­ ஆ­ணை­யி­னை­ மக்­க­ளி­டம்­ இ­ருந்­து­ பெ­று­தல்­ அ­வ­சி­ய­மாகும்.  

எப்­ப­டி­ நெ­டுங்­கா­ல­மா­க­ ஏ­மாற்­று­வது­ என்­ப­து­ ஒ­ழுக்­கக்­கே­டா­ன­ அ­ர­சி­ய­லோ­ அவ்­வா­றே ­ஏ­மா­று­வ­தும்­ ஒ­ழுக்­கக்­கே­டா­ன ­அ­ர­சி­ய­லே­யாகும். இந்­தப் ­ப­டிப்­பி­னை­யை­ சி­று­பான்­மை­யி­னர் ­நாம் ­பெற்­று­விட்டோம், எம­து­ பெ­ரும்­பான்­மைச் ­ச­கோ­த­ரர்­க­ளே­ நீங்­க­ளும்­ இப்­ப­டிப்­பி­னை­யை­ இத்­ தேர்­தல்­மூ­லம் ­பெ­ற­வேண்­டும்’’­என்­று ­தி­றந்­த­ ம­ன­தோ­டு­ கோ­ரு­வ­தற்­கா­ன­ வாய்ப்­பை­ த­மிழ்­பே­சும் ­பொ­து­வேட்­பா­ளர்­ நி­ய­ம­னம்­ ஏற்­ப­டுத்தும்.  

பெரி­ய­ கட்­சிகள், தேர்­தல் ­கா­லங்­க­ளில்­சி­று­பான்­மைக் ­கட்­சி­க­ளை­யும்­மக்­க­ளை­யும்­ இ­டுப்­பில்­ தூக்­கி­வைத்­து­ கொஞ்­சிக்­ கு­ச­லம்­ வி­சா­ரித்­து­விட்­டு­ தூக்­கி­ வீ­சு­கி­ன்ற­ அ­ர­சி­ய­லை  இல்­லா­தொ­ழிக்­க­ வேண்டும். சிறு­பான்­மைத்­ த­லை­வர்­க­ளுக்­கு­ ச­லு­கை­க­ளை­ வ­ழங்­கி­விட்­டு­ ச­மூ­கங்­க­ளின்­பி­ரச்­சி­னை­க­ளை­ ஜ­னா­தி­ப­திக் ­கா­ரி­யா­ல­ய மற்­றும் ­பாரா­ளு­மன்­ற குப்­பைக்­கூ­டை­க­ளுக்­குள் ­போ­டு­கி­ற­ வஞ்­ச­க ­ந­டை­மு­றை­யை­ வீ­தி­யோ­ரக்­ குப்­பைத்­தொட்­டிக்­குள் ­போட்­டு­வி­ட ­நாம்­ து­ணி­ய­வேண்டும்.இத்துணிவை வெளிக்காட்டுவதற்கு தமிழ்பேசும் பொதுவேட்பாளரை நிறுத்துவதே இன்றிருக்கும் ஒரே வழியாகும்.  

அனுகூலமும் பிரதிகூலமும் தந்துவிட்டு ஓய்ந்துபோன தைரியமான முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டமும், அதன்பின்னர் தைரியத்தை அடகு வைத்துச் செய்த பத்தாண்டுகால இணக்கம் கலந்த அச்ச அரசியலும், எமக்கு மேலும் தைரியத்தை தரவில்லை என்றால் அடிமைவாழ்வை தொடர வேண்டிய நிலைதான் ஏற்படும்.அடிமை வாழ்வை தவிர்க்க தமிழ்பேசும் பொதுவேட்பாளரைநிறுத்தி சிங்கள பௌத்த அடக்குமுறை அரசியலுக்கு சிறுபாடம் கற்பிக்கும் தருணத்தை தவறவிட முடியாது.  

அதிகாரத்தை துறந்து புத்தர் காட்டிய ஆன்மீக ரீதியான வாழ்வியல் கல்விக்கு புறம்பாக வன்முறையை கையில் எடுத்துள்ள காவிகள் நாடெங்கும் காவித்திரிகிற அரசியலுக்கு சிறுபான்மையினர் அடிபணிய முடியாது. இவ்விறுதித் தருணத்திலாவது தமிழ் பேசும் பொதுவேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான அழுத்தத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்களும் மக்களும் தமது தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11