( எம்.ஆர்.எம்.வஸீம், நா.தினுஷா)
வேட்பாளர் தெரிவின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டு அரசாங்கம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்த்திருந்தவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுடன் பொதுத்தேர்தலையும் வெற்றி கொள்ள ஒற்றுமையாக செயற்படவேண்டும் என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் நேற்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
1994ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி ஒருவரை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு முடியாமல் போயுள்ளது. அந்த குறையைபோக்கவே இம்முறை இளம் வேட்பாளரான கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்திருக்கின்றோம். வேட்பாளரை தெரிவுசெய்யும்போது கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவை அனைத்தையும் சமாளித்து கட்சியை ஒற்றுமைப்படுத்தும் தீர்வொன்றை வழங்க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடிந்துள்ளது.
அதிகாரப் போராட்டங்கள் இடம்பெறும்போது பல கட்சிகள் பிளவுபட்ட வரலாறு இருக்கின்றது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அர்ப்பணிப்பினால் அந்த நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படவில்லை. கட்சியின் ஒற்றுமையே எமக்குரிய ஒரே பலமாக இருக்கின்றது. அத்துடன் எமது ஆதரவாளர்களும் என்ன நடக்கும் என்ற அச்சத்திலேயே இருந்தனர். என்றாலும் தற்போது எமக்கு சிறந்த முடிவு கிடைத்திருக்கின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சலசலப்பு காரணமாக எமது கட்சி பிளவுபடும் என்றும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடும் என்றும் எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். அதேபோன்று வேட்பாளர் தெரிவில் கட்சிக்குள் ஏற்படும் பிளவு காரணமாக அரசாங்கத்துக்கு ஆதரவளித்துவரும் பங்காளிக் கட்சிகள் பிரிந்துவிடும் என்றும் அதன் மூலம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தனர். என்றாலும் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகொண்டு வழங்கிய தீர்வு காரணமாக பொதுஜன பெரமுன கட்சி வாயடைத்துப் போயுள்ளது.
அதிகாரத்துக்கு வந்து நாங்கள் பல சவால்களுக்கு மத்தியில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். இன்னும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். எமது வேலைத்திட்டங்களை மேலும் அதிகரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்வதுடன் அடுத்த பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM