(இரா.செல்வராஜா)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று பிற்பகல் வரை 21 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டதரணி என்.ஜே. அபேசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 6 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 8 முதல் நள்ளிரவு 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனவும் ஆணைக்குழுவின் உறுப்பினர் அபேசேகர குpற்றிப்பிட்டார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாபதி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுக்களை காலை 9 மணி முதல் 11 மணிவரை தாக்கல் செய்யமுடியும். வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருப்பின் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெரிவிக்கலாம்.
தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும்.
இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப திகதி நாளைவெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM