அரச சொத்துக்கள் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றது : பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி 

Published By: R. Kalaichelvan

03 Oct, 2019 | 03:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் சட்டத்திற்கு முரணாக ஆளும் தரப்பினர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துகின்றார்கள். 

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உரிய கவனம் செலுத்த  வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி கோரிக்கை விடுத்தது. 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அபிவிருத்திகளை விளம்பரப்படுத்துவதற்காக தேசிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸடிக் அற்ற  பிரச்சார நிர்மாணிப்புக்களை செயற்படுத்தவே தீர்மானித்துள்ளோம்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக காணப்பட வேண்டும். தேர்தலின் வெற்றியை கருத்திற் கொண்டு ஆளும் தரப்பினர் தேர்தல் சட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்துகின்றார்கள். 

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு  அரச திணைக்களங்களில் முறையற்ற விதத்தில் நியமணங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்கள். மறுபுறம் பொருட்களின் அடிப்படையில்  சம்மானங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13