(ஆர்.யசி)
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை ஒரு அணியாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ். மாவட்ட மத தலைவர்கள், வடக்கு கிழக்கு மற்றும் வடக்கு-கிழக்கிற்கு வெளியில் இயங்கும் தமிழ் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை சந்தித்துள்ளனர். வடக்கு முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனையும் அவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.
முதல்கட்ட பேச்சுக்களை இவ்வாறு அவர்கள் முன்னெடுத்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியதும் மீண்டும் அடுத்த வாரம் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை இந்தக் கட்சிக்களுடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சந்திப்பில் கலந்துகொண்ட அருட்தந்தை சக்திவேல் கூறுகையில்:-
இன்று ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் அனைவரும் முகங்கொடுக்கவுள்ள நிலையில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தெரியாதுள்ளது. இதில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பதும் எமக்கு தெரியவில்லை. இன்று தமிழ் கட்சிகள் அனைத்துமே பிளவுபட்டு தனித்தனியே இயங்கி வருகின்றமை தமிழ் மக்களை பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாக உள்ளது. இன்று தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக இருந்தும் கூட எம்மால் பலமான சக்தியாக இயங்க முடியாதுள்ளமைக்கு பிரதான காரணம் இந்த கட்சிகளின் பிளவுகளேயாகும்.
ஆகவே தேர்தலில் தமிழ் மக்கள் பிரதான கட்சிகளை ஆதரிக்க முன்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிக் கட்சிகள் ஒரு அணியாக வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதில் பிரதான தமிழ் கட்சிகளை சந்தித்து பேசும் நோக்கத்தில் இன்று காலையில் ( நேற்று) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களை சந்தித்தோம். அவரிடம் இந்த காரணிகளை எடுத்துக்கூறினோம். அதேபோல் பிற்பகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்தோம். அவரிடமும் நாம் இதே காரணிகளை எடுத்துக்கூறினோம்.
எனினும் அவர்கள் தமது தரப்புடன் தனித்தனியே கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுப்பதாகவும், தமிழ் மக்கள் விடயத்தில் இணைந்து பயணிப்பது நன்மையானது என்பதை தாமும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். நாளைய தினம் ( இன்று) வடக்கு முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்திக்க தீர்மானம் எடுத்துள்ளோம். இவர்கள் அனைவரையும் ஒரு அணியாக திரட்டுவதே எமது நோக்கமாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM