தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வாவலின் வலுவான இணைப்பாட்டத்தினால் இந்திய அணி 317 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு -20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் இருபதுக்கு - 20 தொடர் ஏற்கனவே சமனிலையில் முடிய, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 154 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் சர்மாவுடன் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
59.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
அப்போது விக்கெட் இழப்பின்றி ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களத்தில் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதில் மயங்க் அகர்வால் 204 பந்துகளில் 13 நான்கு ஓட்மட், 2 ஆறு ஓட்ட உதவியுடன் சதமடித்தார்.
இதையடுத்து இந்திய அணி சற்று நேரத்துக்கு முன்னர் 82 ஓவர் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 317 ஓட்டங்களை குவித்துள்ளது.
ரோகித் சர்மா 176 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அகர்வால் 137 ஓட்டத்துடனும், புஜாரா எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM