(ஆர்.விதுஷா, இரா. செல்வராஜா )
ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் அதிபர்களும், ஆசிரியர்களும் நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தை அடுத்து ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.
இந் நிலையில் அமைச்சரவையின் உபகுழுவிற்கும் அதிபர், அசிரிய தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதனை கருத்திற்கொண்டே எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை தற்காலிகமான கைவிட்டுள்ளோம்.
வாக்குறுதிகளுக்கு அமைய எமது சம்பள முரண்பாட்டுக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு வாரகால அவகாசத்தையும் வழங்கியுள்ளோம்.
குறித்த கால எல்லைக்குள் தீர்வு கிடைக்கா விடின் முன்னைய தீர்மானத்திற்கு அமைய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM