(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயராகவில்லை, ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரங்களை செய்ய மாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் சஜித்தின் வேண்டுகோளுக்கு பதில் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த நிலையில் தேசிய அரசாங்கம் குறித்த பல விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அலகியவன்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரகாரம் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM