(ஆர்.யசி)
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காதுள்ளமை கவலைக்குரிய விடயம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திடம் எடுத்துக்கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் செயற்பட இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக தாரிக் அஹமத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் ஆகியோரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், தமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான ஒரு அரசியல் அதிகாரபரவலாக்கத்தின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம், நாங்கள் பிரிபடாத பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன்றினையே வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம், மேலும், கடந்த 30 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கிய அதேவேளை இது வரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM