(ஆர்.விதுஷா)
தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தூண்டுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள முரண்பாடுகளுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தர தவறும் பட்சத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் அடங்கலாக நிறைவேற்று அதிகாரிகளில் கொடுப்பனவுகளுக்கு உரித்துடைய அனைவருக்கும் சேவைக்காலத்தை பொருட்படுத்தாது 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடர் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்காத வைத்தியர்களின் கோரிக்கைக்கு தகுந்த தீர்வு இது வரையில் காணப்படவில்லை எனவும் அச் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் இன்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பின்போதே அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
எமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. அதன்போது தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM