வாகனப் புகை பரிசீலனை செய்யும் நிலையம் உடைத்து பணம் திருடியவர் கைது

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 03:35 PM
image

வாகனப் புகை பரிசீலனை செய்யும் நிலையமொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த பணம் வைக்கும் இரும்பு பெட்டியுடன் பணத்தைத் திருடிய திருடனை மகியங்கனைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மகியங்கனை நகரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்த வாகனப் புகை பரிசீலனை செய்யும் நிலையத்திலேயே குறித்த  திருட்டு இடம்பெற்றுள்ளது.

இத்திருட்டு குறித்து மகியங்கனைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் திருடனைக் கைது செய்ததுடன் திருடப்பட்ட பணத்தையும் இரும்புப் பெட்டியையும் மீட்டனர்.

33 ஆயிரம் ரூபா பெறுமதியான பண வைப்பக இரும்புப் பெட்டியில் 46 ஆயிரத்து இருநூற்று முப்பது ரூபா பணம் இருந்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரும்புப்பெட்டி மீட்கப்பட்ட போதிலும் அப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

மேலும் கைது செய்யப்பட்ட நபர் தீவிர விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44