வாகனப் புகை பரிசீலனை செய்யும் நிலையமொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த பணம் வைக்கும் இரும்பு பெட்டியுடன் பணத்தைத் திருடிய திருடனை மகியங்கனைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
மகியங்கனை நகரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்த வாகனப் புகை பரிசீலனை செய்யும் நிலையத்திலேயே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இத்திருட்டு குறித்து மகியங்கனைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் திருடனைக் கைது செய்ததுடன் திருடப்பட்ட பணத்தையும் இரும்புப் பெட்டியையும் மீட்டனர்.
33 ஆயிரம் ரூபா பெறுமதியான பண வைப்பக இரும்புப் பெட்டியில் 46 ஆயிரத்து இருநூற்று முப்பது ரூபா பணம் இருந்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இரும்புப்பெட்டி மீட்கப்பட்ட போதிலும் அப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் தீவிர விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM