மகளிர் இருபதுக்கு - 20 போட்டியில் புதிய உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி என்ற வீராங்கனையே இவ்வாறு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியிலேயே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப் போட்டியில், அவுஸ்திரேலிய வீராங்கனையான அலீசா ஹீலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைக் குவித்து மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியொன்றில் ஆகக் கூடுதலான ஓட்டத்தைக் குவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் இருபதுக்கு - 20 போட்டியொன்றில் ஆகக் கூடுதலாக ஒருவர் குவித்த ஓட்டங்களின் எண்ணிக்கை இதுவாகும். அலீசா 148 ஓட்டங்களைப் பெறுவதற்கு 7 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
46 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அலீசா ஹீலி, ஆட்டமிழக்கார் 148 ஓட்டங்களை குவித்து மகளிர் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைக் குவித்த நிலையில், சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியொன்றில் ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கை என்ற தனது ஓட்ட எண்ணிக்கையை சமப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM