ஒரு தொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமான முறையில் டுபாய்க்கு கடத்த முயன்ற சந்தேக நபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
22 வயதான கிரிவுல்ல பன்னல பகுதியை சேந்த வியாபாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று மாலை டுபாய்க்கு செல்ல முயன்ற போதே அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பையை பரிசோதனை செய்தபோது அன்னாசி மற்றும் விளாம்பழம் போன்ற வாசனை ஏற்படுத்தக் கூடிய பழங்களை கொண்டு வல்லப்பட்டைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 22 கிலோ 950 கிராம் வல்லப்பட்டைகள் மற்றும் 300 கிராம் நிறைகொண்ட வல்லப்பட்டை எண்ணெய்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி சுமார் 12 இலட்சத்து 50 ஆயிரத்து 350 ரூபா என தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சந்தேகநபர் மீது 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM