மெட்ராஸ் படப்புகழ் நடிகை கேத்ரின் தெரசா ‘அருவம்’ படத்தில் வித்தியாசமான மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்தரின் தெரேசா, சதீஷ், மதுசூதன ராவ், கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அருவம்’. என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, எஸ்எஸ் தமன் இசையமைத்திருக்கிறார், டிரைடன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஆர். ரவிந்திரன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப்பற்றி இயக்குனர் பேசுகையில்,“ இந்தப்படத்தில் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை தடுக்கும் அதிகாரியாகவும், உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக சித்தார்த் நடித்திருக்கிறார். வாசனையை நுகரும் சக்தியற்ற மாற்றுத்திறனாளியாக கதையின் நாயகி கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார்.
இதுவரை ஹொரர் படங்களில் சமூகத்துக்கு தேவையான செய்தி இடம்பெறவில்லை. முதன்முதலாக அதனை ‘அருவம்’ படத்தின் திரைக்கதையில் இடம்பெறவைத்திருக்கிறோம். உருவம் இல்லாதது அருவம். தேனீர் விற்பனை நிலையங்கள் தொடங்கி மிகப்பெரிய ஹொட்டேல் வரைக்கும் விற்பனையாகும் கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.” என்றார்.
படத்தைப் பற்றி நடிகை கேத்ரின் தெரசா பேசுகையில்,“ சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இயக்குனர் சாய் சேகர் எம்மை சந்தித்து ‘அருவம்’ படத்தின் கதையை சொன்னார். எம்முடைய கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மூக்கு என்பது சுவாசத்திற்கும், சுவையுடன் கூடிய உணவுப் பொருளின் வாசனையை அறிவதற்கும் உள்ள ஒரு உறுப்பு.
ஆனால் எமக்கு மூக்கு என்பது சுவாசத்திற்கும் மட்டுமே பயன்படும். வாசனை என்பது என்னவென்று என்னுடைய கதாபாத்திரத்திற்கு தெரியாது. எதையும் சுவைத்துப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலையில் எமக்கு ஏற்படும் சம்பவங்களும், அதுதொடர்பான விசாரணைகளும் தான் இப்படத்தின் ஆதாரப்புள்ளி. அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.” என்றார்.
ஹாரர் திரில்லராக தயாராகியிருக்கும் ‘அருவம்’ ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதியன்று உலகம் முழுதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM