(நா.தனுஜா)
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
அதேவேளை தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய, குறிப்பாக மலையகத்தை மையப்படுத்திய கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்தியகுழுக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கொழும்பிலுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் அதன் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்தகுமார் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM