தடைசெய்யப்பட்ட  மீன்பிடி  வலைகளை  பயன்படுத்தி மீன்பிடித்த  ஐவர்  கைது : சீனக்குடாவில் சம்பவம்  

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 04:35 PM
image

 (ஆர்.விதுஷா)

திருகோணமலை - சீனக்குடா  கடற்பரப்பில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை உபயோகித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  ஐவர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கிழக்கு  கடற்படையினர் திருகோணமலை - சீனக்குடா கடற்பரப்பில் மேற்கொண்டிருந்த ரோந்து நடவடிக்கையின்  போது   மீன்பிடிப்படகொன்று  அவதானிக்கப்பட்டுள்ளது. அந்தபகுதிக்கு  விரைந்த  கடற்படையினர்  சோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

இதன் போது மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை  உபயோகித்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த படகில் பயணித்த  ஐவரும் கைது  செய்யப்பட்டனர்.  

சந்தேக நபர்கள் கிண்ணியா பகுதியை சேர்ந்த 33 வயதிற்கும் 60 வயதிற்கும்  இடைப்பட்ட வயதையுடையவர்கள் என  விசாரணைகளின்  போது   தெரிய வந்துள்ளது.  அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகள் அவர்களின் மீன்பிடி படகு  என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சந்தேக நபர்களையும் அவர்களிடமிந்த கைப்பற்றிய பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  திருகோணமலை கடல்வளத்துறை உதவி பணிப்பாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44