கொல்­லப்­பட்ட சிறு­வ­னுக்கு 100,000 யுவான் செலவில் ஆடம்­பர 'பிசாசுத் திரு­மணம்'

Published By: Raam

19 May, 2016 | 08:54 AM
image

இள­வ­ய­தி­னரைக் கொண்ட கும்­ப­லொன் றால் அடித்துக் கொல்­லப்­பட்ட தனது 15 வயது மகனின் ஆத்மா சாந்­தி­ய­டைய அவ­னுக்கு 100,000 யுவான் (10,580 ஸ்ரேலிங் பவுண்) செலவில் தாயொ­ருவர் பிசாசுத் திரு­மணம் செய்து வைத்த விநோத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 6 ஆம் திகதி இடம்­பெற்ற இந்தத் திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங் கள் நேற்று புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஷாங்ஸி மாகா­ணத்தில் ஜியாங் எனும் இடத்தைச் சேர்ந்த ஸாங் பன்­சவோ (15 வயது) என்ற மேற்­படி சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இணை­யத்­தள நிலை­ய­மொன்றில் வைத்து 15 வயது மற்றும் 16 வயதைக் கொண்ட கும்­பலால் அடித்துக் கொல்­லப்­பட்டான்.

இந்­நி­லையில் தனது மகன் மர­ணத்தின் பின் தனித்து துன்­பத்தில் தள்­ளப்­ப­டுவான் எனக் கவ­லை­ய­டைந்த அவ­னது தாயா­ரான தியன் ஸுய­ஜுவான், இறந்த தனது மக­னுக்கு திரு­மணம் செய்­து­வைக்க முடி­வெ­டுத்தார்.

அவர் தனது மக­னுக்கு மண­ம­க­ளாக 3 வரு­டங்­க­ளுக்கு முன் மர­ண­மான ஸாங் சபோபான் என்ற 16 வயது சிறு­மியை தெரி­வு­செய்தார்

தொடர்ந்து ஸாங் பன்­ச­வோ­வுக்கும் ஸாங் சபோ­பா­னுக்கும் பாரம்­ப­ரிய முறைப்­படி ஆடம்­ப­ர­மாக திரு­மணம் செய்­து­வைக் ­கப்­பட்டு ஸாங் பன்­ச­வோவின் சடலம் ஸாங் சபோ­பானின் உடல் புதைக்­கப்­பட்­டி­ருந்த கல்­ல­றையில் புதைக்­கப்­பட்­டது.ஸாங் பன்­ச­வோவின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­பட்ட 6 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right