பண்டாரவளை அட்டாம்பிட்டிய ஊவா ஹய்லன்ஸ் பெருந்தோட்டத் தொழிற்சாலையிலிருந்து தேயிலையைத் திருடிய குற்றச்சாட்டில் தோட்டத் தொழிற்சாலை உத்தியோகஸ்தர் ஒருவரும், கடமையிலிருந்த இரு தொழிலாளர்களும் அட்டாம்பிட்டிய பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து விரைந்த அட்டாம்பிட்டிய பொலிசார் திருடப்பட்டதாகக் கருதப்படும் 32 ½ கிலோ கிராம் தேயிலையை மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து பொலிசார் மீட்டனர். அத்துடன் கடமையிலிருந்த இரு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் தேயிலைத் தொழிற்சாலை மேற்பார்வைக் கடமையிலிருந்த தொழிற்சாலை உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என அட்டாம்பிட்டிய பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM