"கடவுள் சொன்னதால் தான் என் மகளை ஆற்றில் வீசினேன்": தந்தையால் உயிரை விட்ட 2 வயது குழந்தை

Published By: J.G.Stephan

01 Oct, 2019 | 03:57 PM
image

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்ககு வயது 35. இவரின் மனைவி ஜூனுக்கு வயது 30. இவர்களுக்கு  ரிஷிகா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற தந்தையான  பீர்பால்,  சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்தார். அப்போது, அவரின் மனைவி, குழந்தை எங்கே? என்று கேட்டபோது, அருகில் ஓடும் ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு, அதிர்ச்சி அடைந்த மனைவி ஜூனு உறவினர்களிடம் கூற, அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஆற்றில் தேடினர். கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தேடி, குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்

இந்நிலையில், பொலிசார் பீர்பாலை கைது செய்து விசாரித்தபோது, தனது கனவில் கடவுள் வந்ததாகவும், கடவுளே இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால், பிறகு  பில்லி சூனியத்தை நம்பினார் என்றும் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அவர் மனநிலை சரியில்லாதவர் போல இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், மந்திரவாதியின் தூண்டுதலால் இதை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம், , அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08