சிங்கப்பூரில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு உச்சி மாநாட்டினை அடுத்து இலங்கை அரசாங்க நிதிச்சந்தை 15 பில்லியன் ரூபா தேறிய உட்பாய்ச்சலை பெற்றுக்கொண்டது. இந்த நிலைமை உச்சி மாநாட்டிற்கு முந்திய 12 மாதங்களில் 270 பில்லியன் ரூபா வெளிப்பாய்ச்சலாக அமைந்திருந்தது.
இலங்கை முதலீட்டு உச்சிமகாநாடானது கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இடம் பெற்றது. நிதித்துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களின் நூற்றுக்கணக்கான தொழில் நிபுணர்கள் ஆகியோர் இதில் பங்குபற்றியிருந்தனர். இலங்கை அரசாங்கத்தினதும், நிதி மற்றும் வர்த்தகத் துறைகளின் குறிப்பிடத்தக்க நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் உட்பட அதிக எண்ணிக்கையான பிரபல முக்கியஸ்தர்கள் பலரும் இங்கு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த உச்சிமாநாட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பெருமளவு ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் ஆசியாவில் துரிதமாக வளாச்சியடைந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழும் இலங்கையின் நிலைமை பற்றிய கருத்தும் மேம்பட்டது.
பேப்பர்ச்சுவல் ரெஷரீஸ் நிறுவன குழுமத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கசுன் பலிசேன இங்கு கருத்து வெளியிடுகையில், இலங்கையில் முக்கியமான பொருளாதார மேம்பாட்டு நிகழ்வு இடம்பெறவிருக்கிறது. ஏவுகணையிலும் பார்க்க துரிதமாக அது செயற்பட இருப்பதனால், அது இடம்பெறும் போது சந்தைப்படுத்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் என்பன தேவைப்படாது.
அது வரை இலங்கை, முதலீட்டாளருடனான நம்பிக்கையைப் பெற்று அதனைக்கட்டியெழுப்புவது அவசியமாகும்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இதனைப் பூர்த்தி செய்யும் என்பது, எமது நம்பிக்கையாகும் என குறிப்பிட்டார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன் இலங்கையின் கடன் மற்றும் பங்குச்சந்தைகளுடனான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அதிவிசேட முதலீட்டுச் சேவைகள் மூலம் இலங்கையின் முதலீட்டுச் சந்தையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பேப்பர்ச்சுவல் ரெஷரீஸ் நிறுவனம் உதவிவருகின்றது.
சிங்கப்பூரில் சமீபத்தில் முடிவடைந்த முதலீட்டு உச்சிமாநாட்டில் இதற்கு முன்னுரிமையளித்து இந்த நிறுவனமே முக்கிய அனுசரணையாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM