பொது சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் : தயாசிறி 

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 02:24 PM
image

(ஆர்.யசி)

பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது குறித்து சிந்தித்து பதிலளிக்க எதிவரும் 5 ஆம் திகதி வரையில் பொதுஜன முன்னணிக்கு காலக்கெடு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து பயணித்தால் பாதிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இந்நிலையில் நேற்றுமத்தியகுழு கூடிய வேளையில் எம்மால் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியவில்லை. 

காரணம் என்னவெனில் நாம் இப்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம். 

ஆனால் வெறுமனே ஒரு கட்சியாக அல்ல, பொதுவான சின்னம், பொதுவான கொள்கையின் அடிப்படையில் நாம் செல்லவே நினைக்கின்றோம். எனவே எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இறுதித் தீர்மானம் எடுக்க காலக்கெடு உள்ளது என அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02