2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு மாயம்

Published By: Digital Desk 4

01 Oct, 2019 | 02:05 PM
image

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நேற்று மதியம் 54 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வரை அந்த நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாரும், பிரதேசவாசிகளும் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரபகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10