பண மோசடி தொடர்பாக வழக்கொன்றின் நீதிமன்றத்தில் ஆஜரான ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.
குறித்த வழக்கிற்காக ஹேசா விதானகேவை நீதிமன்றில் ஆஜராகத காரணத்தினால் அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யும்படி எம்பிலிபிட்டிய நீதிவான் கே.பி ஆர்.எல் விதான கமகே நேற்றைய தினம் பிடிவிறாந்து உத்தரவை பிறப்பித்தார்.
இந் நிலையிலேயே ஹேசா விதானகே இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரிர பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான கே.ஏ அனுரா மகேந்திர என்பவருடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறை அற்ற விதத்தில் உபயோகித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு செய்த முறைப்பாட்டை அடுத்து பாரளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேக்கு எதிராக எம்பிலிபிட்டிய பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM