(இரா.செல்வராஜா)
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் ஆகியன தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஓய்வுப் பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபயரத்ன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.
குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுப் பெற்றவர்களான மேல் நீதிமன்ற நீதியரசர் சரோஜினி கோசலா வீரவர்தன, கணக்காள்வாளர் நாயகம் கோரளே ஆராச்சிகே பிரேமதிலக, அமைச்சின் செயலாளர் லலித் ஆர்.டீ. சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.கே.டீ. விஜய அமரசிங்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பிரஸ்தாப ஆணைக்குழுவின் இரண்டு இடைக்கால விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத காரணத்தை கருத்திற்கொண்டு இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் விசாரணை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM