போர் வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் வேதனையளிக்கின்றன : தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி

Published By: MD.Lucias

18 May, 2016 | 08:08 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

போர் வெற்றி ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மரணங்கள் கவலையளிப்பதாகவே உள்ளது. கல், மண், சீமெந்தைக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூறும் தினம் இன்று புதன்கிழமை பாராளுமன்ற மைதானத்திலுள்ள படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 

ஜனாதிபதி இங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடக்கம் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளும், மோதல்களும் இடம்பெற்றுள்ளன. இன்று யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனங்களுக்கிடையே அவசர அவசரமாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. 

அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இனங்களிடேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. 

இது இலகுவானதல்ல. கடுமையான சவால் மிக்கது. அதனால் அரசாங்கம் இதனை ஒருபோதும் கைவிடமாட்டாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40