எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் சஜித்

Published By: Vishnu

30 Sep, 2019 | 02:57 PM
image

(ஆர்.யசி)

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தியாகமும் என்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த தமது அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவை இணைத்த சந்திப்பொன்று இன்று காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இந்த நாட்டில் சகல மக்களும், சகல இனங்களும் பாதுகாக்கப்பட்டு  அவர்கள் அனைவருக்கும் சமூக அரசியல் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். 

அரசியல் சமூக பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே மத இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் உருவாகும். அவ்வாறு ஒரு பயணம் ஆரம்பிக்கப்பட்டால் மட்டுமே நாடு பிளவுபடாது, பயங்கரவாதம் பிரிவினைவாதம் உருவாக்கப்படாது முன்நகர முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59