கடந்த காலங்களில் காற்றில் உள்ள மாசுகளினால் மக்களுக்கு சுவாசக்கோளாறு அதிகமாக ஏற்பட்டன என்பதை அறிவோம். ஆனால் தற்பொழுது காற்று மாசுவினால் இதய பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் புகைப்பதால் இதயநோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால் தற்போது சிகரெட் புகைப்பதை விட, காற்றில் கலந்துள்ள மாசுவின் காரணமாக இதய பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கணக்கின்படி இலட்சம் மக்களில் இருநூறு பேர் காற்று மாசின் காரணமாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
வாகனத்தை ஓட்டும் சாரதி ஒருவர், போதிய சுவாச பாதுகாப்பு கவசத்தை அணியாமல் ஒரு சிக்னலில் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தால்... அதனால் ஏற்படும் காற்று மாசு, அவர் ஒரே சமயத்தில் மூன்று சிகரெட் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
காற்று மாசு குருதியிலுள்ள ஹிமோகுளோபின் அளவிலும், தன்மையிலும் பாதிப்பை உருவாக்குகிறது. அதாவது ஹீமோகுளோபினிலுள்ள கார்பாக்சி அமிலத்தின் அளவை அதிகமாக்குகிறது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் உருவாகிறது. இதனால் காற்று மாசு குறித்தும், இதய பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வை பெறவேண்டும். பயணத்தின் போதும், சிக்னலில் நிற்கும் போதும் போதிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
டொக்டர் மஞ்சுநாத்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM