அமெரிக்க ஜனாதிபதி போட்டிக்கு வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தலில் கென்டக்கி மாநிலத்தில் ஹிலாரியும் ஓரிகன் மாநிலத்தில் பெர்னி சாண்டர்ஸூம் வெற்றி பெற்றுள்ளனர்.
பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார்.
ஆரிகன் மாநிலத்தில் ஜனநாயககட்சியில் போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில், ஹிலாரியின் கடும் போட்டியாளராகக் கருதப்படும் சாண்டர்ஸ், கலிபோர்னியாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசும்போது, கடைசி வாக்கு எண்ணப்படும் வரை தான் தொடர்ந்து போட்டியைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் 2,291 பேரின் ஆதரவைப் பெற்றுள்தோடு பெர்ன் சாண்டர்ஸ் 1529 உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்று 2,383 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM