(இரா.செல்வராஜா)
ஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் தலைமையிலான குழவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு அவசரமாக கூட இருப்பதாக கட்சியின் பொது செய்லாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராயப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவார் என்ற நிலைபாட்டிலேயே மஹிந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பழமை வாய்ந்த கட்சி என்பதால் அதை விடுத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப் பேச்சுவார்த்தையின் போது உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதனால் எந்த விதமான இணக்கப்பாடும் காணப்படாத நிலையிலும் அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM