கஞ்சாவை வீட்டு வளவுக்குள் புதைத்து வைத்திருந்தவர் கைது

Published By: Digital Desk 4

28 Sep, 2019 | 09:57 PM
image

வீட்டு வளவுக்குள் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை புதைத்து வைத்திருந்த குடும்பத்தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்..

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் மாவட்ட போதைத் தடுப்புப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

“யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அல்வாயில் உள்ள வீடு ஓன்றுக்குள் சோதனையிடப்பட்டது.

உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் நிலமட்டத்துக்கு மணல் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

அதனை புதைத்து பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான 44 வயதுடைய குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32