வீட்டு வளவுக்குள் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை புதைத்து வைத்திருந்த குடும்பத்தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்..
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் மாவட்ட போதைத் தடுப்புப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
“யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அல்வாயில் உள்ள வீடு ஓன்றுக்குள் சோதனையிடப்பட்டது.
உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் நிலமட்டத்துக்கு மணல் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.
அதனை புதைத்து பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான 44 வயதுடைய குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM