சம்மந்தன் சுமந்திரன் இருவரும் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே ;காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் 

Published By: Digital Desk 4

28 Sep, 2019 | 09:18 PM
image

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடையம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது.

இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38