(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களமிறங்குவதா அல்லது ஆதரவளிப்பதா என்பது குறித்து நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முடிந்தளவு இறுதி தீர்மானத்தை எடுக்கவே முயற்சிப்பதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுஜனவுடனான கூட்டணி ஆகிய விடயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு எல்பிட்டிய தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
எனினும் எல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கூட்டணி தொடர்பிலும் தீர்க்கமாக முடிவொன்று எடுக்கப்படாமையே ஆகும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM