ஜனாதிபதித் தேர்தல் , பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி : சுதந்திர கட்சியின் தீர்க்கமான முடிவு நாளை மறுதினம் ? 

Published By: R. Kalaichelvan

28 Sep, 2019 | 01:13 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களமிறங்குவதா அல்லது ஆதரவளிப்பதா என்பது குறித்து நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிந்தளவு இறுதி தீர்மானத்தை எடுக்கவே முயற்சிப்பதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுஜனவுடனான கூட்டணி ஆகிய விடயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு எல்பிட்டிய தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

எனினும் எல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கூட்டணி தொடர்பிலும் தீர்க்கமாக முடிவொன்று எடுக்கப்படாமையே ஆகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27