ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆபிரிக்க - சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது டிபெஸ்டி பிராந்தியம். இங்குத் தங்கம் மிகுதியாகக் கிடைப்பதால் பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாகச் சுரங்கம் அமைத்துத் தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்றுவருகின்றனர்.
குறிப்பாக அண்டை நாடான சூடனைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல எளிதில் பணம் பெறவும், கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களை வாங்கவும் டிபெஸ்டி பிராந்தியத்தில் சட்டவிரோத சுரங்க பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்கச் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் 30 பேரைப் சடலமாக மீட்கமுடிந்தது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM