(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை அக்கட்சியின் உறுப்பினர்களே வீழ்த்துவார்கள். தமது ஆதரவு எத்தரப் பினருக்கு என்பதை சுதந்திர கட்சி 30ஆம் திகதி இடம் பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
2015ஆம் ஆண்டு அன்னப் பறவைக்கு வாக்களித்து நாட்டு மக்கள் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார்கள். பொதுவேட்பாளராக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கியே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலையும், அதனை தொடர்ந்து இடம் பெற்ற பொதுத்தேர்தலையும் வெற்றிக் கொண்டார்.
இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கி தனது அரசியல் பயணத்தை தொடரலாம்எ ன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தமது அரசியல் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கினார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் நெருக்கடி இக்கட்டான நிலைமைக்கு சென்றதை தொடர்ந்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல நிபந்தனைகளுடன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். நிபந்தனைகளுக்கு தான் அடிபணிய வில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார். மறுபுறம் நிபந்தனைகளின் பிரகாரமே வேட்பாளர் தெரிவு இடம் பெற்றுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை அக்கட்சியின் உறுப்பினர்களே வீழ்த்துவார்கள். நிச்சயம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ வெற்றிப் பெறுவார். பொதுத்தேர்தலினை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிப்பார். ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றார்.
இவ்வூடக சந்திப்பில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்க குறிப்பிடுகையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். அன்னப்பறவை சின்னத்திற்கு 2015ஆம் ஆண்டு வாக்களித்து வடக்கு கிழக்கு உட்பட மலையக தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டது ஏமாற்றங்களேயாகும்.
அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் தமிழ் மக்கள் தனித்து அரசியல் ரீதியர்ன தீர்மானங்களை எடுக்க வேண்டும். போலியான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM