லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி நேற்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அக்கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்தநிலையில் அவர்களை வெளிப்படுத்துமாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மீதான ஆரம்ப விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.
இதில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் பாதுகாப்பினை காரணம்காட்டி அவர் முன்னிலையாகவிருக்க அவரது தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடைக் கட்டளை பெறப்பட்டது.
எனவே கோத்தாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM