நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில் மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர்.
நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர் தான் இஸ்லாமிய சீர்திருத்த பள்;ளியை நடத்துவதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் 13 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் உட்பட பல சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்டுள்ளனர்.
சிலர் மிக குறுகிய இடத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர்,என தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர்கள் மூர்க்கத்தனமானவர்களாக காணப்படவில்லை இதன் காரணமாக அவர்களை அவ்வாறு அடைத்துவைப்பதற்கான அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
சில சிறுவர்களின் முதுகில் காயங்கள் காணப்பட்டன அவர்கள் தாங்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் உடலில் தழும்புகளும் சித்திரவதைக்கான அடையாளங்களும் காணப்பட்டன அவர்கள் தங்களை அங்கிருந்து அகற்றுமாறு மன்றாடினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் அயல்நாடுகளை சேர்ந்த சிறுவர்களும் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் அதிபரையும் ஆறு ஆசிரியர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM