(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலை எதிர்க் கொள்வதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எல்பிடிய பிரதேச சபை தேர்தலை வெற்றிக் கொள்ள வேண்டும்.
எல்பிடிய பிரேதசபை தேர்தல் சஜித் பிரேமதாஸவிற்கு பலப் பரீட்சை என பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற சபை சம்மேளன சபை தலைவர் உதயன அதுகோரல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி பாரிய போராட்டத்தில் மத்தியில் தற்போது தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஒரு தரமான போட்டி காணப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது பொது ஜன பெரமுன வெற்றிப் பெறுவதற்கான சூழலே காணப்படுகின்றது .
எமது வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஒரு சவால் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற அனைத்து மோசடிகளில் இருந்தும் அவர் ஒருபோதும் விடுபட முடியாது.
ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற நிர்வாகத்தினால் இன்று நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களையே எதிர்க் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM