(இரா.செல்வராஜா)
ஆசிரியர்களின் இரண்டுநாள் சுகவீன விடுமுறை போராட்டம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடைப் பெற்றதாக ஆசிரிய தொழிற் சங்ககங்கள் தெரிவித்தன.
இந்த போராட்டத்தின் காரணமாக பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்றய திமான வியாழன் , இன்று வெள்ளி கிழமை ஆகிய இரு தினங்களிலும் ஆசிரியர்கள் , அதிபர்கள் ஆகியோர் இணைந்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. மாணவர்களின் வரவிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
30 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து நேற்று மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆசிரியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாத பட்சத்தில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை வேலை நிறுத்தம் செய்யபோவதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM