நீராவியடி பிள்ளையார் விவகாரம்: திருகோணமலையில் கண்டன போராட்டம்

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 04:27 PM
image

திருகோணமலையில் இன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன் நீராவியடி பிள்ளையார் கோயிலுக்கு உரிமையுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து எரியூட்டப்பட்ட பெளத்த துறவி மற்றும் அங்கு அடாவடியாக நடந்து கொண்ட துறவிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக கண்டனப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நீதியானது பாரபட்சமாக நடைமுறையில் உள்ளதென்றும் இது ஜக்கிய இலங்கையில் இன முரண்பாட்டை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சிங்கள பௌத்த மதத்துக்கு ஆதரவாகவும் ஏனையவர்களுக்கு எதிராகவும் உள்ளதாக எண்ணத்தோன்றுகிறது.

பௌத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பதும் அதற்கு ஆதரவாக பொலிஸார் கடமையாற்றுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே அன்று நீராவியடியில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி பௌத்த பிக்குகள் பிணத்தை எரித்ததற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

   

அன்றைய நீதிமன்ற   தடையுத்தரவை மதிக்காமலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் ஏற்பாடுகளை செய்ய மறுத்த அல்லது செய்யத் தவறிய பொலிஸாருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தோடு நாட்டின் சட்டவாட்சி அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சமூகம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முண்டு கொடுத்தவர்கள்  ஏன் ஆயுதம் தாங்கிய போராட்டம் இங்கு நடைபெற்றது என்பதை இப்போதாவது உணரவேண்டும் எனவே இந்த சட்டவாட்சி அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் மொழிகளுக்கும் பொதுவானது என்பதை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை புரிந்து அதனை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22