உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்துக’ எனும் தொனிப்பொருளில் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றதன் தொடராகவே யாழிலும் இப் ராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாட்டில் உயிர் வாழ்வதற்காக உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமென்று கோஷம் எழுப்பினர்.
இதேபோன்று முல்லைத்தீவு- நீராவியடி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துச் செயற்பட்டதற்கும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM