(செ.தேன்மொழி)
மாளிகாவத்தை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்வத்த பாலத்திற்கருகில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வெல்லம்பிட்டி - மீதொட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 2 கிராம் 280 மில்லி கிராம் ஹெரோயினும் , 20 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM