கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
அத்தோடு பிரதேசமெங்கும் குளிருடன் கூடிய வானிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களின் வரவும் குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆங்காங்கே பனிமூட்டத்தையும் காணமுடிகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் நுவரெலியா கிரகறி வாவியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மரக்கறி தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கும் கடந்த சில தினங்களாக வேலையில்லாமல் அவஸ்தைப்படுகின்றனர். உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி காணிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் மரக்கறி மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே வேளை எவ்வித முன்னறிவிப்புமின்றி அம்பேவல பகுதியில் காணப்படும் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் அங்கிருந்து அதிக நீர்வெளியாகியுள்ளது. இதன்காரணமாக எல்ஜின்–தங்கக்கலை - லிப்பக்கலை, - மெராயா மற்றும் கெளலினா போன்ற பகுதிகளில் விவசாயத்தை மேற்கொண்டவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது மாத்திரமன்றி குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மாத்திரமன்றி அம்பே வல தொழிற்சாலையில் இருந்து வெளியா கும் கழிவு நீரும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தும்புகஸ்தலா ஓயாவில் கலக்கப் படுவதாகவும் கூறுப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM