பிரித்தானிய பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்டத்திற்குப் புறம்பானது என அந் நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைய டுத்து அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன் ஸனுக்கு பதவி விலகுவதற்கு கடும் அழுத் தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தால் ஏகமனதாக அளிக்கப்பட்ட மேற்படி தீர்ப்பையடுத்து பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைக்கூட்டத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பியுள்ளார்.
பாராளுமன்றம் கூடும்போது அத்தியாவசியமான கேள்விகள் மற்றும் அமைச்சரவை அறிக்கைகளுக்கு இடமுள்ளதாக பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜோன் பெர்கவ் தெரிவித்தார். உச்ச நீதிமன் றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பின்போது பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் பிறிக்ஸிட் காலக்கெடுவான எதிர்வரும் ஒக்டோபர் 31 வரையான 5 வாரங்களுக்கு பாராளுமன்றத்தைச் செயற்படுத்த மகாராணியாருக்கு ஆலோசனை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.
நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போரிஸ் ஜோன்ஸன் இந்த நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகாராணியாரைத் தொடர்பு கொண்டு அவருடன் உரையாடியதாக சிரே ஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆனால் அந்த அதிகாரி பிரதமருக்கும் மகாராணியாருக்குமிடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பில் மேலதிக விபரம் எதனையும் வெளியிடவில்லை.
அத்துடன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தனது அமைச்சரவையுடன் 30 நிமிட தொலைபேசி உரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளார். இதன்போது பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசியலமைப்பு சதியொன்றாக குறிப்பிட்டதாக அந்த உரையாடலில் பங்கேற்ற வட்டாரமொன்று தெரிவித்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மேற்படி செயற்கிரமம் தொடர்பான கட்டுப்பாட்டை பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் முற்றாக இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ள னர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து போரிஸ் ஜோன்ஸன் கருத்து வெளியிடுகையில், எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி தனது அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்ட மகாராணியாரின் உரையொன்றை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பது தனக்கு அத்தியாவசியமானதாக இருந்ததாக வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் தனது திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வதை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளதாகவும் பாராளுமன் றம் தேவைக்கு அதிகமான காலம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உச்ச நீதிமன்றம் இவ்வாறான அரசியல் விவகாரங்களுக்கு தனது அதிகார வரம்பை விரிவுபடுத்தி பாரதூரமான தவறொன்றை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உச்ச நீதிமன்றத் தலைவர் ஹேல் சீமாட்டி குறிப்பிடுகையில், மேற்படி வழக்குத் தொடர்பான தீர்ப்பானது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எப்போது, எவ்வாறு விலகுகிறது என்பது பற்றியதல்ல எனவும் இது பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மா னம் பற்றியதாகும் எனவும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெரேமி கொர் பைன் தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், இந்த அரசாங்கம் தான் செய்தது தொடர்பில் பொறுப்புக் கூறவைக்கப்பட வேண்டும். போரிஸ் ஜோன்ஸன் நாட்டை தவறாக நடத்திச் சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத இந்தப் பிரதமர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதேசமயம் ஸ்கொட்லாந்து முதலமைச் சர் நிகொலா ஸ்டர்ஜியனும் வேல்ஸ் முதலமைச்சர் மார்க் ட்ரேக்போர்ட்டும் சின் பெயின் கட்சியின் தலைவர் மிசெல்லி ஒநீலும் பிரதமர் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM